
மதர் தெரசா சட்டக் கல்லூரி மற்றும் விராலிமலை வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் சட்ட விழிப்புணர்வு பேரணி. சட்ட கல்வி பயிற்றுவித்தலின் ஒரு பகுதியாக 03.09.2025 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு விராலிமலை காளை சிலையில் தொடங்கி விராலிமலை முருகன் கோவில் சுற்றி மீண்டும் காளை சிலை வரை சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில் 200 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.